அல்லாஹ்வின் பேருதவியால் தஞ்சை மாவட்டம் கோவிந்தகுடியில் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் 25.01.2008 அன்று நடந்துமுடிந்தது, இதில் A.ஷாஜஹான் (தஞ்சை மாவட்ட வடக்கு தலைவர்) தலைமை தாங்கினார், சகோ: அஷ்ரஃப்தீன் பிர்தௌசி (மாநில பேச்சாளர்) ”நாங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் சிறப்புறையும், MS.ரஹ்மத்துல்லாஹ் (தஞ்சை வடக்கு ஒருங்கிணைப்புகுழு தலைவர் - UAE) ”வரதட்சணை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பிலும், சகோதரி: ஜெசிமா பர்வீன் (ஆவூர்) ”அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். J.சாதிக் அலி (JT மருத்துவஅணி செயலாளர் - UAE), H.நஜீர் அஹமது (அஜ்மான் மண்டலம் - UAE), A.ஜாபர் அலி (மாவட்ட துணைத்தலைவர்), மேலும் சுவாமிமலை ஜாபர் (மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்சியில் ஆண்களும், பெண்களும் பெரும் திரலாக வந்து கலந்துக்கொண்டனர்.
இதுவே கோவிந்தக்குடியில் முதல் பொதுக்கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
|